
உயிர்த்த இயேசுவும் அவர் காட்டிய அன்பும்
இயேசுவுக்கு மிகவும் பிரியமானவர்களே, உயிர்த்த இயேசுவின் சமாதானமும், அன்பும் நம் அனைவரோடும் இருப்பதாக - அல்லேலூயா!
உயிர்த்த இயேசு நமக்கு காட்டிய அன்பை விட மேலான அன்பு உலகில் வேறு இல்லை என்பதை உணர்ந்து எல்லோரும் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் உள்ளவர்களாய் திகழ்ந்து ஒரே மனத்தவராய் இருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள் என்கிறார் ஆண்டவர் இதுவே உயிர்ப்பின் மகிழ்ச்சி, உயிர்ப்பின் பாஸ்கா.
உயிர்த்த இயேசு நமக்கு கொடுத்த அன்பு கட்டளை என்னவெனில் “என்னைப் போலவே நீங்களும் ஒருவர் ஒருவர் மீது அன்பு காட்டுங்கள்”
ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்று புதிய கட்டளைக்கு கீழ்படிவது எளிதல்ல. இயேசு நமக்காக மரித்திருப்பதால் நாமும் அவருக்காக வாழ வேண்டும் என்ற உந்துதல் நமக்கு இருக்க வேண்டும். நாமும் அவரைப் போலவே சுயநலமற்ற தியாக அன்பை காட்டுவதன் மூலம் நாம் அவருக்காக வாழ முடியும்.
Read More